மெரினாவுக்கும் பரவியது மாணவர்களின் நீட் போராட்டம்

  • IndiaGlitz, [Wednesday,September 06 2017]

கடந்த சில மாதங்களாகவே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மாணவர்கள், அனிதாவின் உயிர் தியாகத்திற்கு பின்னர் கொந்தளித்து நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து விரட்டியே தீருவது என்ற நோக்கத்துடன் களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் சென்னை மெரீனாவில் மீண்டும் ஒரு போராட்டம் நடந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் போலீசார், அவ்வப்போது மெரீனாவில் கூடுதல் பாதுகாப்பை போட்டு காத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற மாணவர்கள் சமாதியில் இருந்த தடுப்பை மீறி சமாதியின் அருகே உட்கார்ந்து நீட் தேர்வுக்கு எதிரான கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாணவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அந்த இடத்தை விட்டு வெளியேற செய்யும் முயற்சியில் ஈடுபட்டன.ர் ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்ததால் வேறு வழியின்றி மாணவர்களை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். 
 

More News

நடிகர் செந்தில் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது ஏன்?

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில், தினகரன் அணியின் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே...

மலையாள நடிகர் திலீப்புக்கு 2 மணி நேரம் பரோல்

பிரபல மலையாள நடிகை ஒருவரை காரில் கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்திற்கு மூலகாரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்...

நீட் தேர்வு எதிர்ப்பாளர்களை கிண்டலடித்துள்ள பிரபல நடிகர்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில்...

பிரபுசாலமன் இயக்கும் 'கும்கி 2' படம் குறித்த முக்கிய தகவல்

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம்பிரபு, லட்சுமிமேனன் நடித்த 'கும்கி' திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது...

மாதந்தோறும் குண்டு வெடிக்கும்! நீட் போராட்டக்காரர்கள் அனுப்பிய மொட்டை கடிதமா?

அனிதாவின் மரணத்திற்கு பின்னர் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெரும் பரபரப்பில் உள்ளது.