close
Choose your channels

குடியரசு தினம் கருப்பு தினமாக மாறும். மாணவர்கள் எச்சரிக்கை

Tuesday, January 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த போராடிய இளைஞர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அலங்காநல்லூரில் கைது செய்த இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், 'இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் வரும் குடியரசு தினம் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும்' என்று கோஷமிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 8-ம் தேதி மெரீனாவில் இளைஞர்கள் பெரும் திரளாக ஒன்று கூடி போராட்டம் நடத்திய நிலையில் தற்போது மீண்டும் பெருமளவு அதே இடத்தில் கூடி இளைஞர்கள், மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.