ஆஸ்கார் விருதில் புதிய பிரிவு இணைப்பு.. எஸ்.எஸ்.ராஜமெளலி படத்திற்கு கிடைக்குமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


உலகப் புகழ்பெற்ற ஆஸ்கார் விருதில் புதிய பிரிவு இணைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த பிரிவில் 2028 ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கார் அகடமி இது குறித்து கூறிய போது, அதிரடி ஸ்டண்ட் காட்சிகளுக்கு கௌரவம் செலுத்தும் வகையில் ஸ்டண்ட் காட்சிகளுக்கான ஆஸ்கார் விருது 2028 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட இருக்கிறது. ஆஸ்கார் விருதுகளின் நூறாவது ஆண்டு விழா 2028 என்ற நிலையில் இந்த பிரிவு இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு திரைப்படத்தில் சண்டை காட்சி என்பது மாயாஜாலத்தில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. எனவே, ஆஸ்கார் விருதுகளில் அவை ஒரு பகுதியாக மாறுகின்றன. 2028 ஆம் ஆண்டு நடைபெறும் ஆஸ்கார் விழாவில் ஸ்டண்ட் பிரிவுக்காக விருது வழங்கப்படும் என்றும், 2027 ஆம் ஆண்டு வெளியாகும் படங்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனேகமாக, எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் 2027-இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஸ்டண்ட் காட்சிகளுக்கான முதல் ஆஸ்கார் விருது ஒரு இந்திய படத்திற்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இது குறித்து பலர் பாசிட்டிவான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். "சண்டைப் பிரிவுகளுக்காக ஆஸ்கார் விருது வைத்தால் நிச்சயம் டாம் குரூஸ் விருதைப் பெற்று விடுவார்," என்று கூறி வருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த விருதைப் பெறுவதற்கு எஸ்.எஸ். ராஜமௌலி படம் தான் தகுதி உள்ளது என்றும், சில தமிழ் படத்திற்கும் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சமீப காலத்தில் தான் தேசிய விருதில் ஸ்டண்ட் பிரிவு சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது ஆஸ்கார் விருதுகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது ஸ்டண்ட் இயக்குனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com