ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீண்டும் கைது: இம்முறை என்ன காரணம்?

  • IndiaGlitz, [Tuesday,July 11 2023]

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீரங்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று கனல் கண்ணன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிறிஸ்தவ மதம் குறித்து கனல் கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததாக திமுகவை சேர்ந்த ஜோசப் பெனடிக் என்பவர் புகார் அளித்தார்

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜரான கனல் கண்ணனை விசாரணை செய்த சைபர் கிரைம் போலீசார், விசாரணைக்கு பின் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

சமூக வலைதளத்தில் மத போதகரின் நடன வீடியோவை வெளியிட்டது தொடர்பான புகாரில்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. கைது செய்யப்பட்ட கனல் கண்ணனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

More News

ஓடிடியில் திரைப்படம் வெளியிட்டால் எங்களுக்கு பங்கு வேண்டும்: திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை..!

ஓடிடியில் திரைப்படங்கள் வெளியிட்டால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பங்கு வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கோவில் கோவிலாக சுற்றுப்பயணம்: எஸ்.எஸ்.ராஜமௌலியின் நெகிழ்ச்சியான அனுபவம்..!

தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் செய்த பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது நெகிழ்ச்சியான அனுபவம் குறித்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சீரியல் விட்டே போயிடலாம்னு நினைச்சேன் - நடிகை சத்யா

எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை சத்யா.

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை இயக்குவது இந்த இயக்குனரா? இன்று மாலை அறிவிப்பு..!

தமிழ், தெலுங்கு  மட்டுமின்றி பாலிவுட்டிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பதும் சில படங்களில் வில்லனாகவும் சில படங்களில் நாயகனாகவும் நடித்து வரும் அவர் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த

ஹாலிவுட்டில் தயாராகும் தென்னிந்திய சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. மாஸ் தகவல்..!

தென்னிந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன படத்தின் இரண்டாம் பாகம் ஹாலிவுட்டில் உருவாக இருப்பதாகவும் அதில் முதல் பாகத்தில் நடித்த தென்னிந்திய நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாகவும்