இயக்குநர்- இன்ஸ்பெக்டர் வரை பாலியல் தொல்லை கொடுத்ததாக லிஸ்ட் போட்டு இளம் நடிகை புகார்!

  • IndiaGlitz, [Friday,June 18 2021]

மலையாள நடிகையும் உளவியல் நிபுணருமான ரேவதி சம்பத் (27) தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 14 நபர்களின் பெயர்களை லிஸ்ட் போட்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருப்பது தென்னிந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகையும் உளவியல் நிபுணரான ரேவதி சம்பத், சமூக அர்வலராகவும் இயங்கிவருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான “பட்னாகர்” எனும் திரைப்படத்தில் போலீஸ் வேடத்தில் அறிமுகமானார். அவர் தற்போது “உடலியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் எனக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிகளின் பெயர்கள்” எனக் குறிப்பிட்டு ஒரு பெரிய லிஸ்ட்டை வெளியிட்டு உள்ளார்.

அந்த லிஸ்ட்டில் 14 பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மலையாள சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான சித்திக்கின் பெயரும் இடம் பிடித்து இருக்கிறது.

1.ராஜேஷ் தொச்சிவர் இவர் பட்னாகர் திரைப்படத்தின் இயக்குநர்

2. நடிகர் சித்திக்

3. ஆஷிக் மஹி (புகைப்படக்காரர்)

4. நடிகர் சிஜு

5. அபில் தேவ் (கேரள பேஷன் லீக் நிறுவனர்)

6. டாக்டர் அஜய் பிரபாகர்

7. நந்து அசோகன் (டி.ஒய்.எப்.ஐ. யூனிட் கமிட்டி உறுப்பினர்)

8. மேக்ஸ்வெல் ஜோஸ் (குறும்பட இயக்குநர்)

9. ஷானூப் கர்வத் மற்றும் சாக்கோஸ் (விளம்பர இயக்குநர்)

10. ராகேந்த் பை (காஸ்ட் மீ பெர்பெக்ட், காஸ்டிங் டைரக்டர்)

11. சாருன் லியோ (ஈஎஸ்ஏஎப் வங்கி ஏஜெண்ட்)

12. பினு (சப் இன்ஸ்பெக்டர்)

இவர்களைத் தவிர இணையத்தில் கேலி செய்ததாக சவுரப் கிருஷ்ணன் என்பவரின் பெயரையும் துஷ்பிரயோகம் செய்ததாக எம்.எஸ்.பிதுஷ் நந்து அசோகன் பெயரையும் கூறியிருக்கிறார். இதற்கு முன்பே நடிகர் சித்திக் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது போன்ற விவரங்களை கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகை ரேவதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். தற்போது வெளியிட்டு உள்ள இந்த லிஸ்டிலும் நடிகர் சித்தின் பெயர் இடம்பிடித்து இருக்கிறது.

இந்நிலையில் லிஸ்ட் போட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம் நடிகை ஃபேஸ்புக்கில் புகார் தெரிவித்து இருப்பது சினிமா துறையினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

காவலர்களுக்கு நிவாரணத் தொகை ....! முதல்வர் உத்தரவு....!

கொரோனா காலத்தில் களப்பணியாற்றிய காவலர்களுக்கு 5000 ரூபாயை நிவாரணத்தொகையாக வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டார்

கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்: விஷால் விவகாரம் குறித்து ஆர்பி சவுத்ரி எச்சரிக்கை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி மீது நடிகர் விஷால் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில் இந்த புகார் குறித்து தற்போது ஆர்பி சவுத்ரி விளக்கமளித்து அறிக்கை

மணிகண்டனை கைது செய்ய, மதுரை விரைந்த தனிப்படை போலீசார்.....!

மாஜி அமைச்சர் மணிகண்டன் தலைமறைவானதை தொடர்ந்து, அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் மதுரை விரைந்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தயாரிக்கின்றாரா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே 4 சீசன்கள் முடிவடைந்து விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை எண்டமோல்

கிலோ மீட்டர் கணக்கில் வலை பின்னிய சிலந்தி பூச்சிகள்…. வியப்பில் ஆழ்த்தும் புகைப்படம்!

ஆஸ்திரேலியாவின் பல மாகாணங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கிப்ஸ்லாந்து