ரஜினிக்கு சுப.உதயகுமாரன் கேட்ட 4 கேள்விகள்: இது அரசியலா? இல்லை பள்ளிக்கூடமா?

  • IndiaGlitz, [Tuesday,June 20 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்னும் அரசியல் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத வெற்றிடத்தில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பகல் கனவு கண்ட லட்டர்பேட் கட்சிகள் பதறுகின்றன. ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்பே பதறும் இந்த தலைவர்கள், ரஜினி கட்சி ஆரம்பித்துவிட்டால் என்ன ஆவார்களோ தெரியவில்லை

இந்த நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெறும் 1.5 சதவிகித ஓட்டுக்களை மட்டுமே பெற்று டெபாசிட் இழந்த அணு உலை போராளி என்று கூறிக்கொள்ளும் சுப.உதயகுமார் ரஜினிக்கு 4 கேள்விகள் கேட்டுள்ளார். இந்த நான்கு கேள்விகளுக்கும் ரஜினி பதில் கூறிவிட்டால் ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் அவர் சேர்ந்துவிடுவாராம். அவர் கேட்டுள்ள கேள்விகள் இதோ இதுதான்"

1.ஒரு வெற்றுத் தமிழக வரைபடத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் ரஜினிகாந்த் சரியாக அடையாளப்படுத்துவாரா?

2. நெடுவாசல், வடகாடு, கதிராமங்கலம், திட்டக்குடி போன்ற ஊர்கள் பற்றி ஐந்து வரிகள் எழுதித் தருவாரா?

3. எங்கள் இடிந்தகரை பள்ளி மாணவி ஒருவரோடு கூடங்குளம் அணுமின் திட்டம் பற்றி ஐந்து நிமிடங்கள் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விவாதிப்பாரா?

4. கெய்ல், என்.பி.சி.ஐ.எல்., ஓ.என்.ஜி.சி., ஐ.என்.ஓ. இவையெல்லாம் என்னவென்று சொல்லி, இரண்டு வாக்கியங்கள் பேசுவாரா?

உதயகுமாரின் இந்த கேள்விகளுக்கு ரஜினி ரசிகர்களும் மற்றவர்களும் சமூக வலைத்தளங்களில் பதிலடி கருத்துக்களை கூறி வருகின்றனர். அரசியல் என்பது கேள்வி கேட்டு பதில் எழுதும் பள்ளிக்கூட பரிட்சை அல்ல, மக்களின் பிரச்சனைகள் தீர்க்க நல்ல மனசு இருந்தால் போதும், மார்க் தேவையில்லை என்ற கருத்தை நடுநிலையாளர்கள் உள்பட பலரும் கூறி வருகின்றனர்.

More News

பாகிஸ்தான் மக்களின் மனங்களையும் வென்ற தோனி & கோ

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

கெத்து : ஆம்புலன்ஸ்க்காக ஜனாதிபதி காரை தடுத்து நிறுத்திய காவலர்

முதலமைச்சர் அல்லது அமைச்சர் வருகிறார் என்றால் சுமார் அரைமணி நேரம் வரை போக்குவரத்தை ஸ்தம்பிக்கும் அளவுக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதைத்தான் நாம் இதுவரை பலமுறை பார்த்துள்ளோம்.

செல்பி பிரியர்களுக்கு ஆப்பு வைத்த உபி காவல்துறை

கடந்த சில வருடங்களாக இளைஞர்கள் மத்தியில் செல்பி எடுக்கும் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

விவசாயத்திற்காக சாப்ட்வேர் பணியை உதறித்தள்ளிய தமிழக இளைஞர்

விவசாயம் என்றாலே பாதுகாப்பு இல்லாத தொழில் என்றும், விவசாயம் பார்ப்பவர்கள் நஷ்டத்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றே கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டங்கள் இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்துகின்றன.

இளையதளபதி விஜய்யின் மாஸ் பஞ்ச் டயலாக்குகள்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக பஞ்ச் டயலாக் மிகப்பொருத்தமாக அமைந்த நடிகர் விஜய் தான் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்றாகும்..