close
Choose your channels

சுபஸ்ரீ மரணம்: பேனர் வைத்தவருக்கு நெஞ்சுவலி, மருத்துவமனையில் அனுமதி

Saturday, September 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று முன் தினம் அதிமுக பிரமுகர் ஒருவரின் இல்லத்திருமண விழாவிற்காக சாலையில் வைக்கப்பட்ட பேனர் திடீரென கீழே விழுந்ததால் எதிர்பாராதவிதமாக பலியானவர் சுபஸ்ரீ என்ற இளம்பெண். இதுகுறித்து நீதிமன்றம் சாட்டையை சுழட்டி மாநகாராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, தமிழக அரசுக்கும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது

இதனையடுத்து போஸ்டர் அச்சடித்த அச்சகத்தை சீல் வைத்தும், லாரி டிரைவரையும் மட்டும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து போஸ்டர் அடித்த முன்னாள் கவுன்சிலர் மீது இ.பி.கோ.304(ஏ)- கவனக் குறைவால் மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.