சசிகலாவை அடுத்து சிறைக்கு செல்லும் தமிழக தலைவர் இவர்தான். சுப்பிரமணியன் சுவாமி

  • IndiaGlitz, [Monday,April 10 2017]

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் சிறைக்கு செல்ல காரணமான வழக்கை பதிவு செய்தவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. இவர் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தபோது கூறியதாவது:

சசிகலாவை அடுத்து சிறைக்கு செல்லும் வரிசையில் பல தலைவர்கள் உள்ளனர். சோனியா காந்தியும் அவருடைய மகன் ராகுல் காந்தியும் ஒரு வரிசையில் உள்ளனர். அதேபோல் ப.சிதம்பரம் அவருடைய மனைவி, மகன் ஆகியோர் இன்னொரு வரிசையில் உள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரையில் கனிமொழி மற்றும் ஆ.ராசா ஆகியோர் இன்னொரு வரிசையில் உள்ளனர். இவர்களில் யார் வேண்டுமானாலும் அடுத்து சிறை செல்ல வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

மேலும் டெல்லியில் கடந்த 28 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறித்து கூறிய சுவாமி, 'டெல்லி வெயிலில் அமர்ந்து கொண்டு தமிழக விவசாயிகள் எதற்காக போராடுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. முல்லை பெரியாறு பிரச்சினை குறித்து அப்போது விவசாயிகள் என்னிடம் வேண்டுகோள் வைத்தனர். உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வென்று கொடுத்தேன். தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு தூக்குத் தண்டனை கொடுத்த போது, ராஜபக்சேவிடம் பேசி அவர்களுக்கு விடுதலை பெற்று கொடுத்தேன். அதுபோல விவ சாயிகள் தங்கள் கோரிக்கையை என்னிடம் சொல்லியிருக்கலாமே. போராட்டம் நடக்கும் இடத்தில் இருந்து ஒரு மைல் தூரத்தில்தான் என் வீடு இருக்கிறது. ஆனாலும் யாரும் என்னைப் பார்க்க வர வில்லை' என்று கூறினார்.

More News

ஈரான் இயக்குனரின் படத்தில் தென்னிந்திய நடிகை

உலகப்புகழ் பெற்ற ஈரான் இயக்குனர் மஜித்மஜிதி குறித்து சினிமா ரசிகர்கள் தெரிந்திராமல் இருந்திருக்க முடியாது.

இனிமேல் படங்கள் இயக்க வேண்டாம். தனுஷுக்கு ரஜினி அட்வைஸ்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்தை பார்த்துவிட்டு அந்த படம் குறித்து பாசிட்டிவ் ஆக ஒரே ஒரு குரல் கொடுத்தால் அந்த வாய்ஸ்க்கு இருக்கும் மதிப்பே தனி. சமீபத்தில் கூட இளையதலைமுறை இயக்குனர்களின் படங்களுக்கு ரஜினி வாய்ஸ் கொடுக்க, அந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே.

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் நாயகன் - நாயகி இவர்கள்தான்!!

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ரூ.24 லட்சம் சம்பாதித்த எஞ்சினியர், விவசாயியாக மாறி ரூ.2 கோடி சம்பாதித்த அதிசயம்

படித்தவர்களாக இருந்தாலும் பாமரராக இருந்தாலும் தனது மகன் ஒரு எஞ்சினியர், டாக்டர் ஆக வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் கனவு காண்பது இந்தியாவில் வழக்கமாக உள்ளது. இதேபோன்ற ஒரு சராசரி பெற்றோருக்கு பிறந்த சச்சின் என்பவர் பெற்றோர்களின் விருப்பப்படி எஞ்சினியர் ஆகி ரூ.24 லட்சம் சம்பாதித்த நிலையில் திடீரென மனம் மாறி விவசாயியாக மாற

திரைவிமர்சனம் குறித்து ரஜினி கூறிய குட்டிக்கதை

இன்று நடைபெற்ற 'நெருப்புடா' பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஷால், 'திரைவிமர்சனம் செய்பவர்கள் முதல் மூன்று நாட்களை விட்டுவிட்டு நான்காவது நாள் விமர்சனம் செய்யும்படி கேட்டுக்கொண்டார்...