ரஜினிக்கும் சசிகலாவுக்கும் இடையில் தான் போட்டி: பாஜக பிரமுகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று அரசியலுக்கு தான் வருவது உறுதி என்றும் டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடப் போவதாகவும், ஜனவரி மாதம் கட்சி பெயர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தி ஆகிய இருவரையும் முக்கிய பொறுப்பாளராக நியமித்து அரசியல் கட்சிக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திமுக அதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வரும் நிலையில் பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் சாமி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ரஜினியின் அரசியல் குறித்து ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற விவாதத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி கிடைத்துவிட்டது. இனி அடுத்ததாக ரஜினிக்கும் சசிகலாவுக்கும் இடையில் மட்டுமே போட்டி இருக்கும். பாஜக ஒரு குழப்பமான நிலையில் இருக்கும்; என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் குறித்து இதுவரை யாரும் சொல்லாத ஒரு கோணத்தில் வித்தியாசமான கருத்தை சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

வரிசையில் நிற்க மறுத்த அனிதா: 1 முதல் 13 வரை யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கால்சென்டர் டாஸ்க் என்பது ஒவ்வொரு போட்டியாளரின் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது போல், போட்டியாளர்களை ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் உள்ளது

பத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்!!! காரணம் தெரியுமா???

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வராகப் பதவி வகித்த பிரகாஷ் சிங் பாதல் தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதினை திருப்பி கொடுக்க உள்ளார்

25 ஏக்கர் நிலத்தை பிரதமர் பெயருக்கு எழுதி வைக்கத் துடிக்கும் மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி ஒருவர் தனக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை பிரதமர் மோடி

ரஜினியால் நியமிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தியின் டுவிட்டரில் திடீர் மாற்றம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி அவர்களை நியமனம் செய்தார் என்பதை பார்த்தோம்

நிவர் புயலை எச்சரிக்கையுடன் எதிர்க்கொண்ட தமிழகம்…. பாராட்டி மகிழும் பிரதமர்!!!

தமிழகத்தின் வங்கக்கடல் பகுதியில் உருவாகிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து கடந்த 26 ஆம் தேதி புதுச்சேரி-மரக்காணம் அருகே கரையைக் கடந்தது.