ஜனாதிபதி பதவிக்கு இவர் ஒருவர்தான் தகுதியானவர். சுப்பிரமணியன் சுவாமி

  • IndiaGlitz, [Wednesday,April 26 2017]

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக உள்ளன. சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால் கிட்டத்தட்ட பாஜக தேர்வு செய்யும் வேட்பாளர்தான் அடுத்த ஜனாதிபதி என்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் உள்பட பலர் ஜனாதிபதி வேட்பாளருக்கான பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த பாஜக முடிவு செய்திருப்பதாகவும் ஒரு வதந்தி உலாவி வருகிறது.

இந்த நிலையில் பாஜக முத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி, அடுத்த ஜனாதிபதி பதவிக்கு குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் அவர்கள் மட்டுமே சரியான தேர்வாக இருக்கும் என்று தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே குஜராத்தை சேர்ந்த மோடி பிரதமராக இருக்கும் நிலையில் ஜனாதிபதியும் குஜராத்தை சேர்ந்தவராக இருப்பதில் தவறில்லை என்றும், நானும் குஜராத்தை சேர்ந்த மருமகன் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் மனைவி ரோக்ஸானா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து குறித்து விளக்கமளித்த ஆனந்தி பென், இது சுவாமியின் தனிப்பட்ட கருத்து என்றும், இதுகுறித்து தான் எதுவும் குறிப்பிட விரும்பவில்லை என்றும் கூறினார்.

More News

ரஜினி பட லொகேஷனில் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'

'ரெமோ' படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினிகாந்த் நடித்த 'வேலைக்காரன்' பட டைட்டிலில் உருவாகி வரும் படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. மோகன் ராஜா இயக்கி வரும் இந்த படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கின்றார்...

தினகரன் கைது! அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் என்ன?

இரட்டை இலை சின்னத்தை பெற கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக புகார் சுமத்தப்பட்டு அதன் அடிப்படையில் நேற்று நள்ளிரவு டிடிவி தினகரன் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தினகரன் கைதான சில மணி நேரத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுக, சசிகலா குடும்பத்தினர்களின் முழு கட்டுப்பாட்டில் சென்ற நிலையில் அதனை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்து சென்றார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு பெருமளவு இருந்தது...

தாதா சாகேப் பால்கே விருது வென்ற இயக்குனருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

பழம்பெரும் தெலுங்கு இயக்குனரும் நடிகருமான கே.விஸ்வநாத் அவர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை அறிவித்தது...

பிரபல இயக்குனர் - ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான என்.கே.விஸ்வநாதன் சென்னையில் நேற்று திடீரென காலமானார். அவர் கடந்த சில நாட்களாக அவர் உடல்நலமின்றி இருந்தாலும் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக தெரிகிறது...