இராமரின் பூமியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93? பாஜக மூத்தத் தலைவரின் வைரல் டிவிட்!

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஏற்கனவே உச்சத்தை தொட்டு இருக்கும் நிலையில் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ள 2021-22 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டால் மீண்டும் விலை உயர இருக்கிறது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 88.82 ரூபாய் என்ற அளவுக்கு விற்பனையாகியது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.71 என்ற அளவிற்கு இருந்தது. அதிகபட்சமாக மும்பையில் நேற்று பெட்ரோல் விலை 93 ஆகவும் இருந்தது.

இந்நிலையில் நேற்று பெட்ரோல், டீசல் மீது கூடுதல் செஸ் வரி விதித்து பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் மற்றும் டீசல் மீது 4 ரூபாய் கூடுதல் செஸ் வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இனிவரும் காலங்களில் பெட்ரோல், டீசல் விலை இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் இதனால் அத்யாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி இதிகாச காப்பியமான இராமாயணத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களை வைத்து பெட்ரோல், டீசல் விலையை கிண்டல் செய்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள டெக்ஸ்ட் செய்யப்பட்ட டிவிட்டர் பதிவில் “இராமரின் பூமி எனச் சொல்லப்படும் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 93 ரூபாய். அதுவே சீதாவின் பூமியான நேபாள நாட்டில் 53 ரூபாய்க்கும் இராவணனின் பூமியான இலங்கையில் 51 ரூபாய்க்கும் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது” என பதிவிட்டு உள்ளார்.

இவரது பதிவிற்கு பதில் அளித்து உள்ள சிலர் நேபாளத்தில் பெட்ரோல் விலை ரூ.68.92 காசுக்கும் இலங்கையில் 60.60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது என்றும் சுப்பிரமணிய சுவாமி தவறான தகவலை பகிர்ந்து வருகிறார் என்றும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஆனால் இந்த விலை நிலவரத்தை ஒப்பீடு செய்து பார்த்தாலும் இராமரின் பூமியில் பெட்ரோல், டீசர் விலை மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணிய சுவாமி பதிவிட்டு உள்ள இந்தப் பதிவு நேற்று முதல் சமூக வலைத்தளப் பக்கத்தில் கடும் வைரலாகி வருகிறது.

More News

சச்சின், தோனிக்கு கிடைத்த அதே வாய்ப்பு: ஆனால் மறுப்பு தெரிவித்த நடராஜன்!

சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி ஆகியோர்களுக்கு கிடைத்த வாய்ப்பு தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கும் தேடி வந்த நிலையில் அந்த வாய்ப்பை அவர் மறுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கணவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை வெளியிட்ட தமிழ் நடிகை!

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி கணவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் தமிழ் நடிகை ஒருவர் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

கொரோனாவை விட கொடிய உயிர்க்கொல்லி? அச்சம் தெரிவிக்கும் CDC!

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகுதான் கொரோனா நோய்த்தொற்று குறித்த அச்சத்தில் இருந்து மக்கள் சற்று விடுபட்டு உள்ளனர்.

டாஸ்மாக்கை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும்: கமல்ஹாசன்

சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல என்றும் அதை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

மூளையில் பொருத்தப்பட்ட சிப்பால் வீடியோ கேம் விளையாடும் குரங்கு! இந்த வளர்ச்சி ஆபத்தாகுமா?

அமெரிக்காவில் மனித குரங்கு ஒன்று அதன் மூளையில் பொருத்தப்பட்ட சிப்பின் உதவியால் தற்போது வீடியோ கேம் விளையாடி வருகிறது