ரஜினிகாந்தை தாராளமாக பாராட்டலாம். சுப்பிரமணியன் சுவாமி

  • IndiaGlitz, [Saturday,March 25 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. '2.0' பட நிறுவனமான லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் கட்டப்பட்டுள்ள சுமார் 150 வீடுகளை ரஜினிகாந்த் தனது கரங்களால் ஈழத்தமிழர்களுக்கு வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி உள்பட ஒருசில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் ரஜினி இலங்கை செல்வாரா? அல்லது பின்வாங்குவாரா? என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வருகிறது

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். 'ரஜினிகாந்த் இலங்கை செல்வதற்கு எழுந்துள்ள எதிர்ப்பையும் மீறி பயப்படாமல் அவர் இந்த விழாவில் கலந்து கொண்டால் அவரை தாராளமாக பாராட்டலாம்' என்று சுவாமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

More News

ஆர்.கே.நகர் தேர்தலில் 'விஜய் மக்கள் இயக்கம்' ஆதரவு யாருக்கு? எஸ்.ஏ.சி பேட்டி

இளையதளபதி விஜய்யின் 'விஜய் மக்கள் இயக்கம்' அவ்வப்போது அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருவதால், இந்த இயக்கம் ஒவ்வொரு தேர்தலின்போதும் யாருக்கு ஆதரவு என்கிற நிலையை எடுத்து வருகின்றது

ரஜினிகாந்த் இலங்கை செல்ல முக்கிய அரசியல் கட்சி தலைவர் எதிர்ப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக கட்டியிருக்கும் 150 வீடுகளை திறந்து வைக்க ரஜினிகாந்த் சம்மதித்துள்ளதாக வெளிவந்த செய்தியினை பார்த்தோம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சரத்குமார் கட்சி மனு தள்ளுபடி

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ், தீபா மற்றும் சீமானின் நாம் தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் உள்பட 100க்கும் மேற்பட்டோர் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர்

தீபா வேட்புமனு தள்ளுபடியா?

சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிடும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தீபா நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதிகாசங்களில் ஒன்றாகிய மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக வள்ளியூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆதிநாத சுந்தரம் என்பவர் சமீபத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.