குண்டர் சட்டத்தில் ஒரு மாதம் சிறையில் அடையுங்கள். முதல்வருக்கு சுப்பிரமணியன்சுவாமி கோரிக்கை

  • IndiaGlitz, [Friday,February 17 2017]

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழர்களை பொறுக்கி என்று கூறி வாங்கிக்கட்டி கொண்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் சசிகலாவைத்தான் முதல்வர் பதவியேற்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை கிளப்பியதோடு, கவர்னருக்கு எதிராக வழக்கு தொடுப்பேன் என்றும் அறிவித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் புதியதாக பதவியேற்றிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு சர்ச்சைக்குரிய கோரிக்கை ஒன்றை வைத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இன்று காலை முதல் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராகவும், ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவாகவும் மெரீனாவில் மீண்டும் மாணவர்கள் கூடவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இதனால் மெரீனாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'எடப்பாடி பழனிச்சாமி அரசு சென்னை ஐகோர்ட்டில் இருந்து கலங்கரை விளக்கம் வரை, மெரினா கடற்கரையில் 144 தடை உத்தரவு போட வேண்டும் என்றும் தடையை மீறி அங்கு கூடுபவர்கள் மீது குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்து, ஒரு மாதம் சிறையில் அடைக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார்.

More News

அரசியலில் நுழைய இதுதான் சரியான நேரமா? என்ன முடிவெடுப்பார் இளையதளபதி?

கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களை அடுத்து மிகச்சிறப்பான ஓப்பனிங் வசூல் மற்றும் வெளிநாட்டு வசூல் என்றால் அது இளையதளபதி விஜய் படத்திற்குத்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். திருவிழா நாளாக இல்லாமல் இருந்தாலும் விஜய் படம் வெளியாகும் நாளை அவரது ரசிகர்கள் திருவிழாவாக மாற்றிவிடுவார்கள்...

சபாநாயகருடன் ஓபிஎஸ் அணியினர் திடீர் சந்திப்பு

தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சிக்கு நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெட்டுப்பு கோர உள்ளார். பொதுவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் சபாநாயகரின் ரோல் மிகவும் முக்கியம். அவர் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொண்டால்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு சரியாக நடக்கும்...

அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் நீக்கம். அதிரடி நடவடிக்கை

தமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்று கடந்த சில நாட்களாக சசிகலா தரப்பு அணிக்கும், ஓபிஎஸ் தரப்பு அணிக்கும் போட்டி இருந்த நிலையில் நேற்று சசிகலா ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றதால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நீடிப்பது நாளை நடக்கவுள&#

என்னை பார்த்து சிரிக்க வேண்டாம். முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தின் முதல்வராக நேற்று பதவியேற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றே தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்...

பதவியே போனாலும் பரவாயில்லை. முதல்வருக்கு ஆதரவு இல்லை. ஒரு எம்.எல்.ஏவின் கம்பீர முடிவு

சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதல்வராக பதவியேற்று கொண்டாலும், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னர்தான் அவர் பதவி நிலைக்குமா? என்பது தெரியவரும். இந்நிலையில் சசிகலா அதிமுக அணியில் 124 அதிமுக எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கூறிக்கொண்டாலும் எத்தனை பேர் நாளை முதல்வருக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்பதும்