close
Choose your channels

4 வருடங்கள் கழித்து பிரியாமணி திருமணத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

Friday, July 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாரதிராஜா இயக்கிய ’கண்களால் கைது செய்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ’பருத்திவீரன்’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். முஸ்தபா ராஜ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பிரியாமணியை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரியாமணி-முஸ்தபா ராஜ் திருமணம் நடந்து நான்கு ஆண்டுகள் கழித்து திடீரென அவர்களது திருமணத்தில் சிக்கல் எழுந்துள்ளது. முஸ்தபாவின் முதல் மனைவி ஆயிஷா என்பவர் தனக்கும் முஸ்தபா ராஜ் அவர்களுக்கும் இன்னும் விவாகரத்து பெறவில்லை என்றும் எனவே தனது கணவரின் இரண்டாவது திருமணம் செல்லாது என்றும் கூறியுள்ளார். இதனால் முஸ்தபாராஜ் -பிரியாமணி திருமணத்திற்கு சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து முஸ்தபா ராஜ் கூறிய போது ’நானும் ஆயிஷாவும் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரிந்து விட்டோம் என்றும் அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டோம் என்றும் எனக்கும் பிரியாமணிக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் கழித்து ஆயிஷா தேவையில்லாமல் பிரச்சினை செய்கிறார் என்றும் இந்த பிரச்சனையை நாங்கள் சட்டப்படி சந்திப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.