4 வருடங்கள் கழித்து பிரியாமணி திருமணத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

  • IndiaGlitz, [Friday,July 23 2021]

பாரதிராஜா இயக்கிய ’கண்களால் கைது செய்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ’பருத்திவீரன்’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். முஸ்தபா ராஜ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பிரியாமணியை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரியாமணி-முஸ்தபா ராஜ் திருமணம் நடந்து நான்கு ஆண்டுகள் கழித்து திடீரென அவர்களது திருமணத்தில் சிக்கல் எழுந்துள்ளது. முஸ்தபாவின் முதல் மனைவி ஆயிஷா என்பவர் தனக்கும் முஸ்தபா ராஜ் அவர்களுக்கும் இன்னும் விவாகரத்து பெறவில்லை என்றும் எனவே தனது கணவரின் இரண்டாவது திருமணம் செல்லாது என்றும் கூறியுள்ளார். இதனால் முஸ்தபாராஜ் -பிரியாமணி திருமணத்திற்கு சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து முஸ்தபா ராஜ் கூறிய போது ’நானும் ஆயிஷாவும் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரிந்து விட்டோம் என்றும் அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டோம் என்றும் எனக்கும் பிரியாமணிக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் கழித்து ஆயிஷா தேவையில்லாமல் பிரச்சினை செய்கிறார் என்றும் இந்த பிரச்சனையை நாங்கள் சட்டப்படி சந்திப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

More News

'எதற்கும் துணிந்தவன்' 3வது லுக்: சூர்யா ரசிகர்களுக்கு இன்று செம விருந்து!

நடிகர் சூர்யா இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் 40வது திரைப்படத்தின் டைட்டில் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. 'எதற்கும் துணிந்தவன்' என்று இந்த படத்திற்கு டைட்டில்

இன்று மாலை சூர்யா ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்து!

நடிகர் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவரது ரசிகர்களுக்கு விருந்தாக நேற்று அவர் நடித்து வரும் 40வது படத்தின் டைட்டில் 'எதற்கும் துணிந்தவன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சூர்யா-கார்த்தி இணைந்து எடுத்து கொண்ட முதல் செல்பி: எங்கே தெரியுமா?

நடிகர் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் திரை உலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யாவின் சகோதரரும் பிரபல

கேரளாவுக்கு கடத்தும், கனிம வளங்களை அரசு தடுக்கவில்லை எனில் போராட்டம் நடக்கும்......! சீமான் எச்சரிக்கை....!

கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாக மேற்கு தொடர்ச்சி மலை திகழ்ந்து வருகிறது. ஆனால் இங்கிருந்து கனிம வளங்களை சுரண்டி, கேரளாவிற்கு அனுப்பி வைக்கின்றனர்

விஷாலின் 'எனிமி' டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த இயக்குனர்!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த 'எனிமி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் படப்பிடிப்பு நிறைவடைந்த தினத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்