திடீரென ட்ரெண்டாகும் #ResignModi ஹேஷ்டேக்...!

கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அவர்கள் தவறிவிட்டார் என்பதை கூறும் வகையில், திடீரென டுவிட்டரில் #ResignModi ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

கொரோனாவின் முதல் அலையை, இரண்டாவது அலை வீரியமாக உள்ளது என்றே சொல்லலாம். தினசரி தொற்று பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நம் நாட்டில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. படுக்கை வசதிகள் சரியாக இல்லாதது, ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி குறைவு உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்ய, மத்திய அரசும், மாநில அரசும் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன.

வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களுக்கு பரவலாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்பதை மையமாகக் கொண்டு டுவிட்டரில் பலரும் கருத்து கூறி வருகின்றனர். இந்தநிலையில் டுவிட்டரில் #ResignModi ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்பதை இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டார்.

தமிழகத்தில் டாஸ்மாக் செல்ல 15 கட்டளைகள்… என்னென்ன?

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க இரவுநேர ஊரடங்கு, வெளியூர்- வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இரவு நேரத்தில் வரத் தடை,

வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளது...! சத்யபிரதா சாகு....!

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். 

புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் மூடல்… 39 பேருக்கு கொரோனா பாதித்ததாகத் தகவல்!

சென்னை புரசைவாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர் கடையில் வேலைப் பார்த்த 39 ஊழியர்களுக்கு கொரோனா நோய்ப்பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா பாதித்த பெண்ணிற்கு ஆட்டோவில் சிகிச்சை… மனதை உருக்கும் வீடியோ!

இந்தியாவில் கொரோனா தற்போது தீவிரம் அடைந்து இருப்பதை ஒட்டி பிரதமர் நரேந்திர முக்கிய மருந்து நிறுவனங்கள் மற்றும் மருத்துவர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.