சிம்புவின் பீப் பாடல் குறித்து சுஹாசினி மணிரத்னம் கருத்து

  • IndiaGlitz, [Thursday,December 24 2015]

சிம்பு பாடியுள்ளதாக கூறப்படும் 'பீப் பாடலால் தமிழகம் முழுவதுமே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று சிம்புவை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ள வரை விவகாரம் முற்றியுள்ள நிலையில் இந்த பாடல் குறித்து பிரபல நடிகையும் இயக்குனர் மணிரத்னம் மனைவியுமான சுஹாசினி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.


'நாட்டில் நிறைய கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கும்போது ஒரு பாடலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து குழம்பி கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்று எனக்கு தோன்றுகிறது. வெள்ள நிவாரண பணி, தேர்வுக்கு படிப்பது போன்ற மற்ற விஷயங்களில் அனைவரும் கவனத்தை செலுத்தலாம்

குறிப்பாக நமக்காக பணிபுரிந்த 10 ராணுவ வீரர்கள் நேற்று மரணம் அடைந்துள்ளார்கள். இதுகுறித்து கவலைப்படாமல் எப்போதும் சினிமா சினிமா என்று இருக்க வேண்டாம். சினிமாவில் இருக்கும் நானே இந்த பிரச்சனையை இத்தோடு விட்டுவிடலாம் என்றே நினைக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.

சுஹாசினியின் கருத்தை ஏற்று பீப் பாடல் பிரச்சனைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அனைவரும் கைவிடுவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சிவகார்த்திகேயன் செய்த மிகப்பெரிய உதவி

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரஜினிமுருகன்' திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர்...

விஷால் நிஜத்திலும் கதாநாயகன் தான் : சென்னை காவல்துறை பாராட்டு

சமீபத்தில் சென்னையில் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக கிட்டத்தட்ட சென்னையே மிதந்து பொதுமக்கள்...

'கபாலி' நடிகரின் 'உள்குத்து' முடிவடைந்தது

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் 'அட்டக்கத்தி' ...

இளையராஜா ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த ஜேம்ஸ் வசந்தன்

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் விவகாரம் நாளுக்கு நாள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

நடிகை ஜெனிலியா மீண்டும் கர்ப்பமா?

பிரமாண்ட இயக்குனர் 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமான நடிகை ஜெனிலியா அதன் பின்னர் 'சந்தோஷ் சுப்பிரமணியம்...