மக்களவை தேர்தல் எதிரொலி: பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அதிகரிப்பு

  • IndiaGlitz, [Saturday,March 16 2019]

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவை வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னரே அதாவது ஏப்ரல் 14ஆம் தேதிக்கு முன்னரே தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதனால் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி முதலே பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கவுள்ளது. கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள், ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும் என்பதால் இந்த ஆண்டு 50 நாட்கள் கோடை விடுமுறை கிடைக்கும்.

50 நாட்களுக்கு பின் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் அன்றைய தினமே புதிய பாடத்திட்டத்துக்கான பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
 

More News

ஆன்லைன் லஞ்ச் வேண்டாம்: பெற்றோர்களுக்கு சென்னை பள்ளி நிர்வாகம் வேண்டுகோள்

பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவாக ஆன்லைனில் ஆர்டர் செய்ய வேண்டாம் என் சென்னை பள்ளியின் நிர்வாகம், பெற்றோர்களை கேட்டுக்கொண்டுள்ளது

இதுதான் கடவுள் கொடுத்த வரம்: செளந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கு நடிகர் மற்றும் தொழிலதிபர் விசாகனுக்கும் கடந்த மாதம் 11ஆம் தேதி திருமணம் நடந்தது.

துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு பள்ளி, கல்லூரி மாணவிகள் மனு 

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திற்கு பின்னர் பாலியல் கொடூரர்களிடம் இளம்பெண்கள் சிக்காமல் இருக்க கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால்

பொள்ளாச்சி விவகாரம்: ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு சிபிசிஐடி கடிதம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தாலும், சமூக வலைத்தளங்களில் வீடியோ, ஆடியோ வெளியான பின்னரே தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது

முதல்வர் பழனிச்சாமி-விஜயகாந்த் திடீர் சந்திப்பு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார்.