close
Choose your channels

கணீர் குரலில் செய்தி வாசித்த சன் டிவி பிரபலம் காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

Sunday, September 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் தனது கணீர் குரலால் செய்தி வாசித்த செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் சண்முகம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 52.

சன் டிவியில் தனது கணீர் குரலில், அழகிய தமிழ் உச்சரிப்பின் மூலம் செய்தி வாசித்தும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் இருந்தவர் சண்முகம். மதுரையைச் சேர்ந்த இவர் பத்திரிக்கை நிருபராக தனது பணியை தொடங்கிய நிலையில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இணைந்தார். கடந்த 90ஆம் ஆண்டுகளில் இவரது கணீர் குரலில் அழகிய தமிழில் தெளிவாக, நிதானமாக வாசிக்கப்பட்ட செய்தி மக்கள் மத்தியில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென செய்தி வாசிப்பாளர் சண்முகம் உடல்நலக்குறைவால் காலமானார். இதனை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சண்முகம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த இரங்கல் அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

"தனது தனித்த குரல்வளத்தால் தமிழ் இல்லங்கள் தோறும் எதிரொலித்த ஊடகவியலாளர் . சண்முகம் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். கால் நூற்றாண்டுக்கும் மேலான தனது ஊடகப் பயணத்தில், கணீர் குரல் - ஒழுங்கான வாசிப்பு - துல்லியமான உச்சரிப்பு என்று, செய்தி வாசிப்பில் அவர் இலக்கணமாய்த் திகழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.

அவரது மறைவு ஊடக உலகிற்குப் பேரிழிப்பு. அவரது பிரிவால் வாடும் ஊடக நண்பர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.