close
Choose your channels

கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய சீரியல் நடிகையின் புதிய கார்.. வீடியோ வைரல்

Sunday, December 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய சன் டிவி சீரியல் நடிகை புது கார் வாங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சன் டிவியில் செவ்வந்தி என்ற சீரியலில் நடித்து வரும் நடிகை திவ்யா, சீரியல் நடிகர் அர்ணவ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார் என்பதும் சமீபத்தில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காவல் நிலையம் வரை சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது கர்ப்பமாக இருக்கும் திவ்யா தன்னை தனது கணவர் அடித்து துன்புறுத்தியதாக கொடுத்த புகாரை அடுத்து அர்ணவ் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் ஜாமீனில் தற்போது வெளிவந்துள்ளார்.

இந்த நிலையில் 5 மாத கர்ப்பமாக இருக்கும் திவ்யா தனது பெற்றோருடன் சென்று புதிய கார் வாங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது புதிய காரை வாங்கி ஓட்டிய காட்சிகள் உள்ளன. அந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

5 மாத கர்ப்பிணியாக இருந்த போதிலும் நம்பிக்கை தளராமல் அவர் இன்னும் சீரியல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருவதாகவும் அவருக்கு வாழ்த்துக்கள் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.