close
Choose your channels

ஜீவா படத்தில் இணையும் 'தெறி' நடிகை

Saturday, January 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்யின் 'தெறி' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை சுனைனா. இவர் தற்போது ஜீவா, பாபிசிம்ஹா, காஜல் அகர்வால் நடிக்கவுள்ள 'கவலை வேண்டாம்' படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் தனக்கு சிறிய வேடமாக இருந்தாலும் கதைக்கு முக்கியத்துவமாக வரும் வேடம் என்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக சுனைனா தெரிவித்துள்ளார்.

'யாமிருக்க பயமே' படத்தினை இயக்கிய டீகே இந்த படத்தை இயக்கி வருகிறார். ஆர்.எஸ்.என்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ட்ரெட் குமார் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளது.
எஸ்.என்.பிரசாத் இசையமைக்கவுள்ள இந்த படத்திர்கு முகேஷ் ஒளிப்பதிவும், கெவின் படத்தொகுப்பும் செய்யவுள்ளனர். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.