நாளை மறுநாள் வெளியாகும் சுந்தர் சி அடுத்த படம்.. டீசர் ரிலீஸ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நாளை மறுநாள் அதாவது ஜனவரி 24ஆம் தேதி சுந்தர் சி நடித்த 'வல்லான்’ என்ற திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் அந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுந்தர் சி இயக்கிய 'மதகஜராஜா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுந்தர் சி அடுத்ததாக ’மூக்குத்தி அம்மன் 2’ என்ற படத்தை இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுந்தர் சி முக்கிய கேரக்டரில் நடித்த 'வல்லான்’ என்ற திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சுந்தர் சி ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ள இந்த படத்தில் சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர்.
மணி செய்யோன் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். மணி பெருமாள் ஒளிப்பதிவில், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஒரு நிமிடத்திற்கு மேலான டீசர் இணையத்தில் வெளியாகி இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற 'கண்ணை கட்டி ஆடுற கண்ணாமூச்சி ஆட்டத்தை விட, மனுஷங்க கண்ணை திறந்துகிட்ட இருக்கும் போது ஆடுற கண்ணாமூச்சி ரொம்ப சுவாரசியமா இருக்கும்..’என்ற வசனம் அனைவரையும் கவர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments