ஸ்ரீரெட்டியின் பாலியல் புகாரில் சிக்கிய பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Monday,July 16 2018]

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தன்னை வாய்ப்புக்காக பயன்படுத்தியதாக பல திரையுலக பிரமுகர்கள் மீது கடந்த சில மாதங்களாக குற்றஞ்சாட்டி வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களாக அவரது பார்வை தமிழ்த்திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது.

ஏற்கனவே ஒருசில தமிழ் பிரபலங்கள் மீது அவர் பாலியல் புகார்கள் கூறியுள்ள நிலையில் இன்று அவர் பிரபல இயக்குனர் சுந்தர் சி மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை 2' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று கொண்டிருந்தபோது அந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு போன் செய்ததாகவும், அவரை நேரில் சந்தித்தபோது அவர் இயக்குனர் சுந்தர் சியை அறிமுகம் செய்ததாகவும், அந்த சமயத்தில் தன்னுடைய ஃபேஸ்புக் நண்பரும் ஒளிப்பதிவாளருமான செந்திலையும் தான் சந்தித்ததாக தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்

மேலும் சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தில் நாயகிகளில் ஒருவராக தனக்கு வாய்ப்பு தருவதாக வாக்களித்ததாகவும் அதன் பின்னர் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் என்ன நடந்தது என்று பெருமாளுக்கே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த குற்றச்சாட்டு தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.