தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சுந்தர் சி: குஷ்பு வெளியிட்ட புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,April 16 2021]

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவின் கணவருமான சுந்தர் சி அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதனை அடுத்து மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் தனது கணவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்வதாகவும் குஷ்பு தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்

இந்த நிலையில் சற்று முன் தனது கணவர் சுந்தர் சி அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் புகைப்படத்தை குஷ்பு தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தனி அறையில் சுந்தர்சி ஒரு நாற்காலியில் உட்கார்ந்து மொபைல் போனை பார்த்து கொண்டிருப்பது போன்றும் சில அடிகள் தூரத்தில் குஷ்பு உட்கார்ந்து கொண்டு அவரை பார்த்துக் கொண்டிருப்பதுமமான இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

இது மாதிரி தான் நாங்கள் சில நாட்களாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம் என்றும், இன்னும் மூன்று நாட்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் அதன் பின்னர்தான் அவர் அவருடைய தனிமைப்படுத்தப்பட்டு காலம் முடிவடைந்து வீட்டிற்குள் வருவார் என்று குஷ்பு அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.

More News

பற்றி எரியும் பாகிஸ்தான்… பிரான்ஸ் மக்கள் வெளியேற வேண்டும் எனக் கோரிக்கை… நடந்தது என்ன?

நீண்ட காலமாகவே நபிகள் நாயகத்தின் கற்பனை செய்து வரையப்பட்ட உருவப்படம் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

2ஆவது அலை கொரோனா வைரஸ் குழந்தைகளைக் குறி வைத்து தாக்குகிறதா?

இந்தியாவில் 2 ஆவது முறையாக தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது.

நடிகர் விவேக் உடல்நிலை கவலைக்கிடம், தடுப்பூசியால் பிரச்சனையா? மருத்துவர்கள் விளக்கம்

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர் விவேக் அவர்கள் இன்று காலை திடீரென மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்

விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் 'கோடியில் ஒருவன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில்

கொரோனாவால் பாதிப்பு அடைந்த பவர்ஸ்டார்: மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவர்ஸ்டார் பவன்கல்யாண் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக