கூகுள் சுந்தர் பிச்சைக்கு 5 வருடத்தில் 80 ஆயிரம் கோடி சம்பளம்… வெளியான தகவல்!

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் டெக் நிறுவனங்களில் பணியாற்றி வரும் சிஇஓக்களின் சம்பளப் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. அதில் ஆல்பாபெட் நிறுவனத்திற்கும் அதன் துணை நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கும் செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு கடந்த 5 வருடத்தில் 80 ஆயிரம் கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கரக்பூரில் ஐஐடியில் பொறியியல் படிப்பையும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டமும் பெற்றவர். பின்பு வார்ட்டன் எம்பிஏ பள்ளியில் மேலாண்மை படிப்பையும் முடித்துள்ளார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பின்பு கடந்த 2014 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து அதன் சிஇஓவாக பணியாற்றி வருகிறார். இதில் 2015 – 2020 ஆம் ஆண்டு காலக்கட்டத்திற்கு அவருடைய சம்பளமாக 80 ஆயிரம் கோடி பெற்றுள்ளார் என்றும் இந்தத் தொகை பங்குகள் மற்றும் பணமாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவரைத் தவிர ஃபேஸ்புக் நிறுவனத்தின் சிஇஒ மார்க் Zuckerberg இந்திய மதிப்பில் 4.17 லட்சம் கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளார் என்று நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டு இருக்கிறது. இந்தப் பணம் கடந்த 2012 – 2020 ஆம் ஆண்டுக்கானது என்றும் பங்குகள் மற்றும் பணமாக இத்தொகை அவருக்கு வழஙகப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

More News

சிவகார்த்திகேயன் வீட்டு காய்கறித்தோட்டம்: வைரல் வீடியோ

இந்த லாக்டவுன் நேரத்தில் பிரபல நடிகர் நடிகைகள் அனைவரும் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதால் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிப்பதற்காக சிலர் மொட்டை மாடியில் தோட்டம்

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் விஜய் ரசிகர்கள்!

தமிழகத்தில் எப்போதெல்லாம் இயற்கை பேரிடர் வருகின்றதோ அப்போதெல்லாம் முதல் நபராக களத்தில் இறங்கி உதவி செய்பவர்கள் தளபதி விஜய் ரசிகர்களாக தான் இருப்பார்கள் என்பது ஏற்கனவே அறிந்தது.

ரஜினியின் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தது இந்த நடிகையின் மகளா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2002ஆம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்தபோது பிரபல நடிகை ஒருவரின் மகள் தான் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்ததாக அந்த நடிகை

ஆர்யா தயாரித்து, நடிக்கும் படத்தை இயக்கும் விருது பெற்ற இயக்குனர்!

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'சார்பாட்டா பரம்பரை' விரைவில் ரிலீசாக உள்ளது.

டாஸ்மாக்-கை இதற்காகத் தான் திறக்கிறோம்....! ஸ்டாலின் கூறிய பதில்....!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை இதற்காகத் தான் திறக்கிறோம் என்று முதல்வர் முக.ஸ்டாலின் விளக்கம் கூறியுள்ளார்.