close
Choose your channels

என்னை இரண்டாவது கணவர் துன்புறுத்துகிறார்: போலீசில் புகார் அளித்த தமிழ் நடிகை

Thursday, April 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட கதாநாயகியாக நடித்த நடிகை ஒருவர் தன்னை இரண்டாவது கணவர் துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

முரளி, வடிவேலு நடித்த ’சுந்தரா டிராவல்ஸ்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை ராதா. இவருக்கும் தயாரிப்பாளர் ஒருவருக்கும் திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆகி விட்ட நிலையில் சமீபத்தில் அவர் வசந்த ராஜா என்ற சப் இன்ஸ்பெக்டரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது

இருவரும் கடந்த ஒரு சில ஆண்டுகளாக சாலிகிராமத்தில் வாழ்ந்து வந்த நிலையில் வசந்த ராஜாவுக்கும் நடிகை ராதாவுக்கும் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், ராதாவின் நடத்தையில் வசந்தராஜா சந்தேகமடைந்ததாகவும், ராதா தனது திரையுலக நண்பர்கள் உடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டு அவரை கண்டித்ததாகவும் தெரிகிறது

இந்த நிலையில் திடீரென தன்னை துன்புறுத்துவதாக நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். நடிகை ராதா தனது இரண்டாவது கணவரான சப்-இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா மீது புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.