close
Choose your channels

சுந்தர் சி படத்தில் முதன்முறையாக இணையும் பிரபல நடிகை

Tuesday, January 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூஜம் பாஜ்வா மற்றும் பலர் நடித்த 'அரண்மனை 2' என்ற பிரமாண்டமான திகில் படம் ஜனவரி 29ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவது உறுதியாகியுள்ள நிலையில் சுந்தர் சி இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

'அரண்மனை 2' படத்தை போலவே அடுத்த படத்திலும் சுந்தர் சி முக்கிய வேடத்தில் நடித்து இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு பிஜூமேனன், நிக்கி கல்ராணி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகிய 'வெள்ளிமூங்கா' என்ற படத்தை சுந்தர் சி தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது

இந்த படத்தில் சுந்தர் சியுடன் பிரபல நடிகை ப்ரியா ஆனந்த் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஒருசில முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.