close
Choose your channels

சூப்பர்ஹிட்டான சுந்தர் சியின் முதல் படத்தின் இரண்டாம் பாகம்! 

Thursday, September 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி ஹீரோவாக நடித்த முதல் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது

சுந்தர் சி இயக்கிய பல திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் அவர் நடித்து இருந்தாலும் அவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் ’தலைநகரம்’. சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் தான் சுந்தர் சி ஹீரோவாக அறிமுகமானார் என்பது இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற வடிவேலு காமெடி இன்றளவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த படம் வெளியான நிலையில் 15 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இந்த படம் குறித்த உறுதி செய்யப்பட்ட தகவல் தற்போது வெளிவந்துள்ள நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தை வி.இசட் துரை என்பவர் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுந்தர் சி இயக்கிய ’அரண்மனை 3’ திரைப்படம் வரும் அக்டோபர் 14ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.