ஆர்யா ஒரு தயாரிப்பாளரின் நடிகர்: 'அரண்மனை 3' இயக்குனர் சுந்தர் சி

  • IndiaGlitz, [Monday,October 11 2021]

சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகிய ’அரண்மனை 3’ என்ற திரைப்படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அதில் சுந்தர் சி பேசியதாவது: அரண்மனையை முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் ஆகிய இரண்டிற்கும் நல்ல ஆதரவு கொடுத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது நன்றி. இதைத்தொடர்ந்து ’அரண்மனை 3’ திரைப்படத்தை நாங்கள் இப்போது முடித்துள்ளோம்

அரண்மனை படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பது ரொம்ப ஈசி என்று பார்ப்பதற்கு தோன்றும். ஆனால் அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பது மிகவும் கடினமானது. புதிதாக ஒரு படம் எடுக்கும் போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆடியன்ஸ் உள்ளே வருவார்கள். அந்த படத்தில் ஒருசில நல்ல விஷயங்கள் இருந்தாலே படம் வெற்றி பெறும். ஆனால் அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கும் போது ஏற்கனவே பார்த்த விஷயங்கள் பிரமித்த விஷயங்களை எதிர்பார்த்து ஆடியன்ஸ் வருவார்கள். அவர்கள் எதிர்பார்த்த விஷயங்கள் இருக்க வேண்டும், அதே நேரத்தில் வேறு மாதிரியும் இருக்க வேண்டும் என்ற சிக்கல் அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கும்போது உள்ளது. இதுதான் எங்கள் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால்

அரண்மனை படத்தை பொறுத்தவரை இரண்டு பாகங்களும் ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் எனக்கு ஒரு லாபகரமான படம். ஆனால் அதே நேரத்தில் அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கும்போது நல்ல திரைக்கதை அமைந்தால் மட்டுமே எடுக்க வேண்டும். காமெடி த்ரில் ஆகியவை அமைந்தால் மட்டுமே படம் சிறப்பாக அமையும். அதற்காக காத்திருந்தபோதுதான் அருமையான ஸ்கிரிப்ட் கிடைத்ததை அடுத்து ’அரண்மனை 3’ படத்தை நாங்கள் உருவாக்கினோம்

அதேபோல் நல்ல நடிகர் நடிகைகளும் இந்த படத்திற்கு சிறப்பாக அமைந்தனர். அதன்பிறகுதான் இந்த படத்தை ஆரம்பிக்க எனக்கு நம்பிக்கை வந்தது. அரண்மனை 3’ படத்தில் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது ஆர்யா. அவர் உண்மையாகவே ஒரு தயாரிப்பாளருக்கான நடிகர். இந்த படத்தில் நடித்தது மட்டுமின்றி இந்த படத்தை பிசினஸ் செய்யவும் ஆர்யா உதவியுள்ளார். எனவே ஒரு தயாரிப்பாளராக எனக்கு பக்கபலமாக ஆர்யா பல உதவிகள் எனக்கு செய்தார்

அதேபோல் இந்தப் படத்தின் கடைசி 15 நாள் கிளைமாக்ஸ் எடுக்கும்போது ஆர்யா மற்றும் ராஷிகண்ணா ஆகிய இருவரும் எங்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தனர். பல வருடங்கள் நானும் ஆர்யாவும் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். அது இந்த படத்தில் தான் அமைந்துள்ளது என்பது எனக்கு மிகவும் நல்ல மகிழ்ச்சி அதேபோல் ராஷிகன்னா அவர்களுக்கு இந்த படத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர். மிகவும் அழகான ஹீரோயினான அவர் ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளார். பொதுவாக அரண்மனை படங்களில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். அந்த முக்கியத்துவம் இந்த படத்திலும் உள்ளது

மேலும் சாக்ஷி அகர்வால், ஆண்ட்ரியா ஆகிய அனைவருமே முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். அதேபோல் யோகிபாபு, மனோபாலா விவேக் சார் ஆகியோர்களும் மிகச் சிறந்த முறையில் நடித்துள்ளனர். விவேக் அவர்களை குறிப்பிட வேண்டும் என்றால், ‘விவேக் அவர்கள் எனது மிகவும் அருமையான நண்பரும். அவர் மறைந்து விடுவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவருடன் குஜராத்தில் படப்பிடிப்பில் இருக்கும்போது ஒரு குடும்பமாக வாழ்ந்தோம். எங்களுக்கெல்லாம் மிகுந்த அட்வைஸ் செய்த அவர் திடீரென மறைந்தது எங்களுக்கு மிகவும் பெரும் இழப்பு’ என்று சுந்தர் சி தெரிவித்தார்.

More News

பிக்பாஸ் முதல் நாமினேசனில் டார்கெட் செய்யப்படும் பெண் போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி கடந்த ஒரு வாரமாக கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் போட்டியாளர்கள் மத்தியில் இந்த ஒரு வாரத்தில் பெரிய அளவில் சண்டை

படக்குழுவுடன் உற்சாகமாகப் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப்பல மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம்வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

திருமண விழாவிற்கு ஸ்பெஷலான அலங்காரம்… வைரலாகும் நடிகை அமலாபால் பிக்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அமலாபால். “மைனா“ திரைப்படத்தின்

பிங்க் உடையில் வேறலெவல் போட்டோஷுட்… பிக்பாஸ் நடிகையின் வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன்- 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் ரைசா வில்சன்.

செவ்வாய் கிரகத்தில் குடியேறலாமா? நாசா வெளியிட்ட அட்டகாசமான தகவல்!

செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் ஓடியதற்கான ஆதாரம் இருப்பதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் அதிகாரப்பூர்வத் தகவல் வெளியிட்டு இருக்கிறது.