close
Choose your channels

நேற்று புகார் அளித்த நடிகை ராதா இன்று வாபஸ்: என்ன நடந்தது?

Friday, April 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தன்னுடைய இரண்டாவது கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக நேற்று ’சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இன்று அந்த புகாரை அவர் வாபஸ் பெற்று உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை ராதா தயாரிப்பாளர் ஒருவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இதன்பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்

இந்த நிலையில் சமீபத்தில் எண்ணூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தராஜா என்பவருடன் ராதாவுக்கு நட்பு ஏற்பட்டது. அதன் பின் இருவரும் திருமணம் செய்து கொண்டு சாலிகிராமத்தில் வாழ்ந்து வந்தனர்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தன்னை தனது இரண்டாவது கணவர் சந்தேகம் கொண்டு அடித்து துன்புறுத்துவதாகவும் நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். இந்த புகார் மீது காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர்

இந்த நிலையில் தற்போது அவர் தனது புகாரை வாபஸ் பெற்று உள்ளார். தனது கணவர் பிரிந்து தன்னிடம் வருத்தம் தெரிவித்ததாகவும் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும் அதனால் தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.