close
Choose your channels

ஊரடங்கு நேரத்தில் சன்னிலியோன் செய்த சேவை!

Tuesday, June 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்துவரும் நிலையில் ஏராளமான ஏழை எளிய மக்கள் வேலை இன்றி, வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் ஏழைகளுக்கு உதவி செய்து வருகின்றனர் என்ற செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

குறிப்பாக தனது சொந்த பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் ஏழை எளிய மக்களுக்காக செலவு செய்து வருகிறார் சோனுசூட் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தனது கணவருடன் இணைந்து மும்பையிலுள்ள மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்

உணவு உடை உள்பட அடிப்படை தேவைகளை ஏழை எளிய மக்களுக்கு சன்னிலியோன் வழங்கி வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு நேரத்தில் உணவின்றி தவித்த மும்பை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கி சேவையாற்றிய நடிகை சன்னி லியோனுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.