சென்னையில் சன்னிலியோன்: கொச்சி போல் குலுங்குமா?

  • IndiaGlitz, [Friday,August 18 2017]

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நேற்று கொச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த போது அவரை பார்க்க அலைகடலென கொச்சியில் ரசிகர்கள் குவிந்தனர். மக்கள் வெள்ளத்தில் அவரது கார் ஊர்ந்து சென்றபோது சன்னிலியோனை வாழ்த்தி ரசிகர்கள் போட்ட கரகோஷத்தால் சன்னிலியோன் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடி போனார்.
இந்த நிலையில் கொச்சியை அடுத்து விரைவில் சன்னிலியோன் சென்னைக்கு வருகை தரவுள்ளாராம். ஆம், பிரபல தயாரிப்பாளர் தாணுவின் வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கெளதம் கார்த்திக் நடித்து வரும் 'இந்திரஜித்' படத்தில் ஒரு பாடலுக்கு சன்னிலியோனை ஆட வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த பேச்சுவார்த்தை பாசிட்டிவ்வாக முடியும் நிலையில் இருப்பதால் இந்த பாடலின் படப்பிடிப்புக்கு சன்னிலியோன் சென்னைக்கு விரைவில் வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
'இந்திரஜித்' படப்பிடிப்புக்காக சன்னிலியோன் சென்னைக்கு வந்தால் கொச்சி ரசிகர்களை போல சென்னை ரசிகர்களும் மாபெரும் வரவேற்பு கொடுத்து சென்னையை குலுங்க வைப்பார்களா? அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ஜெயலலிதா நினைவிடம் திடீர் அலங்கரிப்பு: ஓபிஎஸ்-ஈபிஎஸ் வருகையா?

சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திடீரென மலர்களால் சற்று முன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

காதலில் விழுந்து திருமணத்தில் இணையும் பிக்பாஸ் பங்கேற்பாளர்கள்

பொழுதுபோக்கு ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களில் பலர் ஒரே குடும்பம் போல் வாழ்ந்தாலும் அதில் பங்கேற்கும் சிலர் காதலில் விழுவதும் உண்டு

காஜலின் அதிரடி கேள்வியால் வசமாக மாட்டிய ஆரவ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் ஒரு புதுமுகம் அறிமுகமாகி வருகின்றனர்.

நடிகர் விவேக்கின் விவேகமான சமூக சேவை

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பின்னர் நகைச்சுவையில் சமுதாயத்தில் உள்ள குறைகள் குறித்த விழிப்புணர்வை புகுத்தியதால்தான் சின்னக்கலைவாணர் என்ற பட்டம் நடிகர் விவேக் அவர்களுக்கு கிடைத்தது.

தென்னிந்திய திரையுலகின் முதல் முயற்சி: தளபதியின் மெர்சலுக்கு கிடைத்த பெருமை

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' குறித்த சிறப்பு அப்டேட் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகவுள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தியை சிலமணி நேரங்களுக்கு முன் பார்த்தோம்...