close
Choose your channels

'புஷ்பா 2' எத்தனை மொழிகளில் உருவாகிறது தெரியுமா? அப்ப பான்-இந்தியா அல்ல, பான்-வேர்ல்ட்!

Sunday, July 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகம் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘புஷ்பா’. இந்த படம் சுமார் 170 கோடியில் உருவாக்கப்பட்ட நிலையில் 350 கோடி வசூல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவான இந்த படத்தின் அடுத்த பாகம் வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இது குறித்த புகைப்படத்தை அல்லு அர்ஜுன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது .

இந்த நிலையில் ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் 10 மொழிகளில் உருவாக இருப்பதாகவும் இந்திய மொழிகள் மட்டுமின்றி வெளிநாட்டு மொழிகளில் உருவாக இருப்பதால் இந்த படம் பான்-வேர்ல்ட் திரைப்படம் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் பகத்பாசில், ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ள நிலையில் விஜய் சேதுபதியும் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.