close
Choose your channels

4 பாகங்களாக அடுத்தடுத்து உருவாக இருக்கும் சூப்பர்ஹிட் திகில் திரைப்படம்!

Tuesday, June 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹாலிவுட்டில் ஒரு திரைப்படத்தின் பல பாகங்கள் அடுத்தடுத்து வெளியானாலும் தமிழ் திரையுலகை பொறுத்தவரை இரண்டு அல்லது மூன்று பாகங்கள் மட்டுமே அதிகபட்சமாக வெளியாகும் என்பது தெரிந்ததே. ஆனால் தமிழ் திரையுலகில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திகில் திரைப்படம் ஒன்று நான்கு பாகங்களாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’டிமான்டி காலனி’. இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அடுத்து சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு வெளியானது.

அஜய் ஞானமுத்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், வெங்கி என்பவர் இந்த படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அருள்நிதி முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த அருள்நிதி, ‘ டிமாண்டி காலனி’ திரைப்படம் அடுத்தடுத்து நான்கு பாகங்களாக வெளியாக இருப்பதாகவும் அதற்கான கதைகள் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். எனவே சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘டிமாண்டி காலனி’ அடுத்தடுத்து நான்கு பாகங்களாக வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.