close
Choose your channels

ரூ.60 லட்சம் வீடு பரிசு பெற்ற சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் இவரா? குவியும் வாழ்த்துக்கள்..!

Monday, June 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமானது சூப்பர் சிங்கர் என்பதும் கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடந்த நிலையில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் 10 லட்ச ரூபாய் ரொக்க பரிசு பெற்ற டைட்டில் வின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த போட்டியாளருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது.

சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியில் தகுதி பெற்ற அபிஜித், அருணா, பூஜா, பிரியா மற்றும் பிரசன்னா ஆகியோர்களில் அருணா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்தவுடன் அருணாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. இதனை அடுத்து அவருக்கு 60 லட்சம் வீடு மற்றும் 10 லட்ச ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது இடத்தை பெறுபவர் பிரியா என்றும் மூன்றாவது இடத்தை பிரசன்னா பெற்றார் என்றும் அறிவிக்கப்பட்டது. இருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் மற்றும் ஐந்து லட்ச ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற அருணா ஏற்கனவே ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் ஒரு பாடலை பாடிய நிலையில் தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் தனது இசையில் பாட வாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பெரும் கலகலப்பாக கொண்டு சென்ற பூஜா மற்றும் அபிஜித் ஆகிய இருவருக்கும் பரிசு கிடைக்காதது அவரது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.