close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் வின்னர்? புதிய தகவல்

Monday, September 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி மிக விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

சற்று முன் இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி நாராயணன் ஆகியோர் உறுதி செய்யப்பட்டதாக வெளிவந்த தகவலையும் அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவலையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ஒரு ஆச்சரிய தகவலாக ’சூப்பர் சிங்கர் ஜூனியர் 3’ நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்ற அஜித், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் கையால் விருது வாங்கிய ஆஜித், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பது சூப்பர் சிங்கர் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மேலும் இவர் திருச்சியை சேர்ந்தவர் என்பதும், முன்னதாக திருச்சியை சேர்ந்த ஆரவ் மற்றும் கவின் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.