'எங்கள் வீட்டுக்கு வந்த குட்டி மனிதன்'; சூப்பர் சிங்கர் பிரபலத்தின் நெகிழ்ச்சியான பதிவு..!

  • IndiaGlitz, [Friday,February 17 2023]

எங்கள் வீட்டிற்கு வந்த குட்டி மனிதனை நாங்கள் வரவேற்று உள்ளோம் என்றும் தற்போது நாங்கள் பெற்றோர்கள் ஆகிவிட்டோம் என்றும் சூப்பர் சிங்கர் பிரபலம் நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்பதும் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய இரண்டுக்குமே ரசிகர்கள் ஏராளமானார் உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தற்போது திரையுலகிலும் பாடகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமானவர்களில் ஒருவர் அஜய் கிருஷ்ணா என்பது பலரும் அறிந்ததே.

அஜய் கிருஷ்ணா தனது ரசிகையான ஜெசி என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்த நிலையில் சமீபத்தில் ஜெசி கர்ப்பமானார். அவ்வப்போது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை அஜய் கிருஷ்ணா தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் தற்போது தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 12ஆம் தேதி எங்கள் வீட்டிற்கு ஒரு குட்டி மனிதன் வந்து விட்டார். நாங்கள் இப்போது பெற்றோர்கள் ஆகிவிட்டோம், எங்களுக்காக ஒரு சிறிய குடும்பத்தை உருவாக்கி தந்த அந்த குட்டி மனிதனுக்கு இன்னும் நிறைய செய்ய நாங்கள் ஆசைப்படுகிறோம்’ என்று தெரிவித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான பதிவு வைரல் ஆகி வருகிறது.

More News

மீண்டும் இணைந்த சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணி.. வைரல் ஆகும் குத்து பாடல்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'மாவீரன்' படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அந்த பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

'வாரிசு' ஓடிடி ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது தெரிந்ததே.

யூடியூப் சி.இ.ஓவாக இந்தியர் நியமனம்.. சுந்தர் பிச்சையை அடுத்து மேலும் ஒரு இந்தியருக்கு பெருமை..!

உலகின் நம்பர் ஒன் வீடியோ சமூக வலைதளமான யூடியூப் நிறுவனத்தின் சிஇஓவாக இந்தியா வம்சாவளியை சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

'க/பெ ரணசிங்கம்' இயக்குனரின் அடுத்த படம்.. ஹீரோ இந்த பிரபலம் தான்..!

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'க/பெ ரணசிங்கம்' என்ற படத்தின் இயக்குனர் விருமாண்டி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. 

'காற்றுக்கென்ன வேலி' சீரியல் நடிகர் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் சக நடிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்றான 'காற்றுக்கென்ன வேலி' என்ற சீரியலில் நடித்து வந்த நடிகர் ஒருவர் திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது