close
Choose your channels

அண்ணன் மனைவி திடீர் மரணம்: பெங்களூர் விரைந்தார் ரஜினிகாந்த்

Monday, September 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அண்ணன் சத்யநாராயணராவ் அவர்களின் மனைவி பத்மாவதி அம்மாள் என்பவர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இந்த தகவல் அறிந்து உடனடியாக ரஜினிகாந்த் பெங்களூர் விரைந்தார்

சத்தியநாராயண ராவ் அவர்களின் மனைவி பத்மாவதி கடந்த சில நாட்களாக சிறுநீரகக் கோளாறு, சர்க்கரை நோய் ஆகியவைகளால் பாதிக்கபப்ட்டிருந்ததால் பெங்களூருவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவரது உயிர் நேற்று நள்ளிரவில் பிரிந்ததாக தெரிகிறது.

அண்ணன் மனைவி இறந்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த ரஜினிகாந்த் இன்று காலை விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டு சென்று தனது அண்ணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். சத்திய நாராயண ராவ் - பத்மாவதி தம்பதிக்கு ராமகிருஷ்ணன், மகாதேவ், பாண்டுரங்கன், ஆகிய 3 மகன்களும் ராதாபாய் என்ற மகளும் உள்ளனர்.

மேலும் சத்தியநாராயணராவ் மற்றும் பத்மாவதி தம்பதி, ரஜினியை இன்னொரு மகன் போலவே வளர்த்தனர். ரஜினியின் திரையுலக வெற்றியில் அண்ணன், அண்ணிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.