close
Choose your channels

மகிழ்ச்சி. மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி' அருவி இயக்குனர் கூறியது ஏன் தெரியுமா?

Wednesday, December 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் வெளியான ;'அருவி' திரைப்படம் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று என்று படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த படத்திற்கு வெகுசிலரை தவிர அனைவருமே பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருவதால் படத்தின் வசூலும் எதிர்பார்த்ததைவிட பலமடங்கு உயர்ந்துள்ளது.

இந்த படத்தை கோலிவுட் பிரபலங்களான இயக்குனர் ஷங்கர், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், இயக்குனர் சுசீந்திரன், ஜெயம் ரவி உள்பட பலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். மேலும் அனைத்து ஊடகங்களும் 4 ஸ்டார்களுக்கும் மேல் இந்த படத்திற்கு கொடுத்து கொண்டாடி வருகின்றன.

இந்த நிலையில் நல்ல படங்கள் வெளியாகும்போது மனம் திறந்து பாராட்டும் பண்பை வழக்கமாக கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் 'அருவி' படத்தை பார்த்து வியந்துள்ளார். அவர் இயக்குனர் அருண்பிரபுவுக்கு தொலைபேசி மூலம் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் அருண்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: உச்சம் தொடும் அன்பின் கொடி. ஆம். ஒரு தொலைபேசி அழைப்பு. திரு. ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து. மகிழ்ச்சி. மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.