close
Choose your channels

கணவர், மகனுடன் பொங்கல் கொண்டாடிய செளந்தர்யா ரஜினி: வைரல் புகைப்படங்கள்!

Saturday, January 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் முழுவதும் பொங்கல் திருவிழா அனைத்து தமிழர்களாலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் குடும்பத்தினரும் பொங்கல் விழா கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

சாமி படங்களுடன் மலர்கள் இருக்கும் புகைப்படத்தையும், கிச்சனில் பொங்கல் வைத்து படைக்கும் புகைப்படத்தையும், கணவர் மற்றும் குழந்தையுடன் கடவுள் படத்திற்கு தீபாரதனை காட்டும் புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், கையில் கரும்புக்கட்டை வைத்து கொண்டு புகைப்படம் ஒன்றை பதிவு செய்து ‘அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்’ என்று தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos