close
Choose your channels

இனிமேல் அரசியலுக்கு வரமாட்டேன்.. கட்சி ஆரம்பித்து தோல்வி அடைந்த ரஜினி நண்பர் பேச்சு..!

Wednesday, February 12, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அரசியல் கட்சி ஆரம்பித்து எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியடைந்த பிரபல நடிகர், இனிமேல் அரசியல் பக்கம் வரமாட்டேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் சிரஞ்சீவி சமீபத்தில் "பிரம்மானந்தம்" என்ற திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது, "நான் அரசியலுக்கு மீண்டும் வருவேன்" என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால், "இனிமேல் வாழ்நாள் முழுவதும் நான் சினிமாவுக்கு அர்ப்பணிக்க உள்ளேன். மீண்டும் நான் அரசியலுக்கு கண்டிப்பாக வரமாட்டேன். ஆனால் அதே நேரத்தில், சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்பேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், "ஒரு படத்தின் கதை எவ்வளவு முக்கியமோ, அதே அளவு வெளியீட்டு விழாவும் முக்கியம். அப்போதுதான் அந்த படம் ரசிகர்களை சென்றடையும்" என்றும் அவர் கூறினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், சிரஞ்சீவி தான் கட்சி ஆரம்பிக்க வேண்டாம் என அவருக்கு அறிவுறுத்தியதாகவும், அதன் பின்னரே ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கும் முடிவில் இருந்து பின்வாங்கியதாகவும் கூறப்படுகிறது. சிரஞ்சீவி மற்றும் ரஜினிகாந்த் பல வருடங்களாக நண்பர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos