'நெள பாபா கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்.. ரஜினியின் 'பாபா' டிரைலர்

  • IndiaGlitz, [Saturday,December 03 2022]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது டிஜிட்டல் முறையில் நவீன தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டுள்ளது என்பது மேலும் ஒரு சில வசனங்கள் மற்றும் காட்சிகள் மாற்றப்பட்டதை அடுத்து மீண்டும் ரஜினிகாந்த் டப்பிங் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், விறுவிறுப்பாக இருக்கும் வகையில் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான இந்த படத்தின் கதை திரைக்கதை எழுதி ரஜினிகாந்த் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தலைவன்' இல்ல, அதனால 'தலைவி'க்கு இந்த பட்டத்தை கொடுக்கிறேன்.. மணிகண்டன் கூறியது யாரை?

 தலைவன் அசீம் இல்லை அதனால் தலைவி தனலட்சுமி இந்த பட்டத்தை கொடுக்கிறேன் என மணிகண்டன் இன்றைய வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடாவின் சுயசரிதையை இயக்குகிறேனா? இயக்குனர் சுதா கொங்கரா தகவல்!

இயக்குநர் சுதா கொங்கரா இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் ரத்தன் டாடாவின் சுயசரிதையை இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். 

ஆர்யா-சாயிஷா மகளின் க்யூட் வீடியோ.. இணையத்தில் வைரல்

தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான ஆர்யா - சாயிஷா தம்பதிகளின் மகள் இருக்கும் க்யூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நாளை வெளியாகும் பாடலில் ஒரு சூப்பர் ஸ்பெஷல்: 'வாரிசு' படக்குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பில் விபத்து.. பரிதாபமாக பலியான பிரபலம்!

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பிரபலம் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.