அந்த 3 கேரக்டர்கள் நம் நெஞ்சை விட்டு அகலாது:  தேசிய விருது பெற்ற இயக்குனருக்கு ரஜினிகாந்த் கடிதம்!

  • IndiaGlitz, [Saturday,August 13 2022]

அந்த மூன்று கேரக்டர்கள் நம் நெஞ்சை விட்டு அகலாது என தேசிய விருது பெற்ற இயக்குனர் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் மூன்று விருதுகளை பெற்ற திரைப்படம் ’சிவரஞ்சனியும் சில பெண்களும்’. இயக்குனர் வசந்த் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: மதிப்பிற்குரிய இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் சார் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்குனர்களில் அவர்கள் மிகவும் முக்கியமானவர் வசந்த். பாலசந்தர் சார் அவர்களுக்கு மிகவும் பிடித்தவர். இயக்குனர் வசந்த் அவர்கள் இயக்கிய படங்கள் அனைத்துமே நல்ல கருத்தாழமிக்க அருமையான படங்கள்.

அவர் இயக்கியுள்ள ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் அவர் இயக்கிய படங்களிலேயே மிகவும் அருமையான படம் என்று சொன்னால் அது மிகையல்ல. பாரதி கண்ட புதுமைப்பெண்கள் ஆன மூன்று பெண் கதாபாத்திரங்களை வைத்து மூன்று கதைகள் ஆக்கி இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தை பார்த்தவர்கள் அனைவரும் இந்த படைப்பை பாராட்டுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் இந்த படத்தை பார்த்த பிறகு அந்த மூன்று கதாபாத்திரங்களும் நம் நெஞ்சை விட்டு அகலாது. இதுபோன்ற அருமையான படத்தை அளித்த வசந்த அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...’ என்று ரஜினிகாந்த் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

More News

கார்த்திக்கு இதுதான் பெஸ்ட்: 'விருமன்' வசூல் தகவல்கள் வைரல்!

கார்த்தி நடித்த 'விருமன்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளதை

மறக்க முடியாத நினைவுகள்: பத்மஸ்ரீ நடிகருக்க்கு புகழாரம் சூட்டிய லெஜண்ட் சரவணன்!

 பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகர் ஒருவரின் புகைப்படங்களை பதிவு செய்து அவருடனான மறக்க முடியாத நினைவுகள் குறித்து ட்வீட் செய்துள்ளார் .

டுவிட்டருக்கு வந்த மாஸ் தமிழ் நடிகர்: முதல் நாளே கிடைத்த 'வெரிஃபைட்'

 தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர் டுவிட்டருக்கு வந்த நிலையில் ஒரு டுவிட் கூட பதிவு செய்யப்படாத நிலையில் முதல் நாளே அந்த டுவிட்டர் பக்கத்திற்கு 'வெரிஃபைட்'அந்தஸ்து கிடைத்துள்ளது. 

சிவாஜி மகள்கள் தொடர்ந்த வழக்கு: சாந்தி தியேட்டரும் வழக்கில் இணைப்பா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகள்கள் சொத்துக்கள் குறித்து தொடர்ந்த வழக்கில் சாந்தி தியேட்டரையும் இணைக்க புதிய மனு கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமீர்கானின் 'லால்சிங் சத்தா': முதல் நாள் வசூல் இவ்வளவு தானா? 2வது நாளே தியேட்டர் குறைப்பு!

ஒருபக்கம் தென்னிந்திய திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகி வரும் நிலையில் பாலிவுட் திரைப்படங்கள் தொடர் தோல்வி அடைந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.