close
Choose your channels

'லால் சலாம்' படப்பிடிப்பு முடியும் முன்பே சென்னை திரும்பிய ரஜினி.. என்ன காரணம்?

Wednesday, May 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மும்பை சென்று இருந்த நிலையில் அந்த படப்பிடிப்பு முடியும் முன்பே திடீரென அவர் சென்னை திரும்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ’லால் சலாம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் தற்போது மும்பையில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்த நிலையில் ரஜினியுடன் நடிக்க வேண்டிய நடிகர் வராததால் படப்பிடிப்பு தாமதமானதாகவும் இதனை அடுத்து ரஜினி சென்னை திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரஜினியின் மீதமுள்ள காட்சிகளை சென்னையில் மும்பை போன்ற செட் போட்டு படமாக்கப்பட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மொய்தீன் பாய் என்ற முஸ்லீம் கேரக்டரில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.