அயோத்தி தீர்ப்பு குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி கருத்து

  • IndiaGlitz, [Saturday,November 09 2019]

நாடே பெரிதும் எதிர்பார்த்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த தீர்ப்பின்படி சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும், அதே சமயம் அயோத்தியில் மசூதி கட்ட இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் இடத்தை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது

இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என பெரும்பாலானோர் பாராட்டி வருகின்றனர். ஒருசிலர் மட்டும் தீர்ப்பு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது வீட்டின் முன்னே செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த தீர்ப்பு குறித்து கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நான் மதிக்கின்றேன், அனைவரும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்திய நாட்டின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் மதவேறுபாடின்றி ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்’என்று கூறினார்.

More News

தாயையும் மகளையும் படுக்கைக்கு அழைத்த தமிழ் திரைப்பட நடிகர்! அதிர்ச்சி தகவல்

மாடல் அழகி மற்றும் அவரது தாய் ஆகிய இருவரையும் படுக்கைக்கு அழைத்தது உண்மைதான் என தமிழ் திரைப்பட நடிகர் ஒருவர் ஒப்புக்கொண்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தீர்ப்பு எங்களுக்கு திருப்தி இல்லை: சன்னி வக்ஃப் வாரியம்

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பில்,'சர்ச்சைக்குரிய அயோத்தியின் இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும்,

அயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், கோவில் கட்டவும் அனுமதி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

அயோத்தி வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வாசிக்க தொடங்கிய நிலையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அயோத்தி இந்துக்களுக்கே சொந்தம் என்றும் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டவும் உச்சநீதிமன்றம் அனுமதி

அயோத்தி வழக்கு: தீர்ப்பின் முதல்கட்ட விபரங்கள்

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த தீர்ப்பில் முதலில் 5 நீதிபதிகள் கையெழுத்திட்டனர். இந்த தீர்ப்பை 5 நீதிபதிகளும் ஏகமனதாக ஏற்று தீர்ப்பு அளிக்கின்றனர்.

ரஜினி பட வில்லனுக்கு ஜோடியாகும் தமன்னா!

நடிகர் விஷாலுடன் தமன்னா நடித்த 'ஆக்சன்' திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அவர் தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.