close
Choose your channels

வாழ வைத்த தெய்வங்களுக்கு நன்றி சொன்ன சூப்பர் ஸ்டார்!

Wednesday, November 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் கோல்டன் ஐகான் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கோவாவில் தொடங்கிய சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் ஐகான் விருதை அழைத்தார்

இந்த விருதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நிகழ்ச்சியுடன் பேசியபோது, ‘இந்த விருதை எனக்கு அளித்த மத்திய அரசுக்கு நன்றி. மேலும் மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர், கோவா முதல்வர், எனக்கு முன்மாதிரியாக திகழும் அமிதாப்பச்சன் ஆகியோர்களுக்கும் நன்றி. இந்த விருதை நான் என்னுடைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

மேலும் இந்த நேரத்தில் நான் எனது ரசிகர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். குறிப்பாக என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு எனது நன்றி என்று தெரிவித்தார். இந்த விழாவில் அமிதாப்பச்சன் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.