நடிகர் தவசியிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியது என்ன?

  • IndiaGlitz, [Wednesday,November 18 2020]

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்பட பல திரைப்படங்களில் கிராமத்து கேரக்டர்களில் நடித்து அசத்திய நடிகர் தவசி கடந்த சில நாட்களாக புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு திமுக எம்எல்ஏ சரவணன் அவர்கள் தனது டிரஸ்டின் மூலம் இலவசமாக சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்.

இருப்பினும் நடிகர் தவசிக்கு நிதி உதவி தேவைப்படுவதை அறிந்து நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 25 ஆயிரமும், நடிகர் சூரி ரூபாய் 20 ஆயிரமும் முதல் கட்டமாக அளித்தனர். மேலும் நேற்று நடிகர் விஜய் சேதுபதி ஒரு லட்ச ரூபாயை தனது நண்பர் மூலம் நேரடியாக தவசிக்கு வழங்க ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வரும் தவசியிடம் தொலைபேசி மூலம் பேசினார். அவருக்கு அளிக்கப்பட்டு கொண்டிருக்கும் சிகிச்சை முறை குறித்தும், தற்போதைய அவருடைய நிலை கேட்டறிந்ததோடு, விரைவில் நீங்கள் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே தொலைபேசியில் பேசி தவசி விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து இருப்பது அவரது குடும்பத்தினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது