'அண்ணாத்த' இயக்குனருக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை கொடுத்த ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியான நிலையில் இந்த படத்தை பெரும்பாலான ஆன்லைன் விமர்சகர்கள் நெகட்டிவ் விமர்சனம் செய்தனர் என்பதும் ஆனால் அதே நேரத்தில் குடும்ப ஆடியன்ஸ் திரையரங்குகளில் குவிந்ததால் இந்த படம் மிகப்பெரிய வசூலை எட்டியதாகவும் கூறப்பட்டது.

மொத்தத்தில் இந்த படம் வசூல் அளவிலும் ரசிகர்கள் மத்தியிலும் வெற்றி பெற்ற படம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ’அண்ணாத்த’ வெற்றியை இயக்குனர் சிறுத்தை சிவா உள்பட படக்குழுவினர் கொண்டாடி வரும் நிலையில் திடீரென இயக்குநர் சிறுத்தை சிவாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள தகவல் வெளிவந்துள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவாவின் வீட்டிற்கு எதிர்பாராமல் சென்ற ரஜினிகாந்த் அவரது குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்தியதோடு, இயக்குனர் சிவாவுக்கு தங்க செயின் பரிசளித்து உள்ளார் என்ற தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மீண்டும் சிறுத்தை சிவா மற்றும் ரஜினிகாந்த் இணைவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


 

More News

பாரீஸ் நகருக்கு ஓய்வெடுக்க சென்ற பிஸியான பிரபல நடிகை: வைரல் புகைப்படம்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் பாரிஸ் நகருக்கு ஓய்வெடுக்கச் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

திடீரென கோஷம் போட்ட தாமரை: பிரியங்காவின் ரியாக்சன் என்ன தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸையே காமெடியாக கலாய்த்து ஆரம்ப காலகட்டங்களில் பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்ற பிரியங்கா, நாளாக ஆக தனது சுயரூபத்தை காண்பித்து கொண்டிருப்பதாக

ஓ சொல்றியா, ஓ ஓ சொல்றியா: 'புஷ்பா' சமந்தாவின் வீடியோ பாடல்!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' என்ற திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக

புலியை பிடிக்கணும்ன்னா வேட்டைக்காரன் வேணும்: 'ஆர்.ஆர்.ஆர்.' டிரைலர்

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில், ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகிய 'ஆர்.ஆர்.ஆர்.' என்ற திரைப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக இருக்கும்

அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்த கலெக்டர்… இணையத்தை கலக்கும் புகைப்படம்!

சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில்கொண்டு வாரத்தின் புதன்கிழமைகள் தோறும் அரசு அதிகாரிகள் சைக்கிளில் வரவேண்டும்