பாராளுமன்ற கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் செங்கோல்: 'தமிழன்டா' ரஜினிகாந்த் ட்விட்..!

  • IndiaGlitz, [Sunday,May 28 2023]

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் முக்கோண வடிவில் 970 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர்கள், எம்பிக்கள் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் பிரதமர் மோடி இடம் ஆதீனங்கள் செங்கோலை ஒப்படைக்க அந்த செங்கோல் சபாநாயகரின் இருக்கை அருகில் வைக்கப்பட்டது. முன்னதாக முன்னதாக செங்கோலை பெற்றவுடன் பிரதமர் மோடி கீழே விழுந்து வணங்கினார்

இந்த நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல்.

#தமிழன்டா

தமிழர்களுக்கு பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

More News

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஷங்கர் பட நாயகன்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரின் அடுத்த திரைப்படத்தில் ஷங்கர் படத்தில் நடித்து வரும் நாயகன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தியின் 'ஜப்பான்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு.. மாஸ் தகவல்..!

கார்த்தி நடித்து வரும் 'ஜப்பான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஜூன் 2ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தகவல்

உண்மை கதை என்று கூறினால் மட்டும் போதாது, உண்மையும் இருக்க வேண்டும்: கமல்ஹாசன்

உண்மை கதை என்று கூறினால் மட்டும் போதாது கதையில் உண்மையும் இருக்க வேண்டும் என உலகநாயகன் கமல்ஹாசன் 'தி கேரளா ஸ்டோரி' என்ற படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அப்போ! கல்யாணமான பையனை லவ் பண்ணி இருக்க? தோழிகளை கலாய்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'தீராக்காதல்' என்ற திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்தவர்கள் படம் சூப்பராக இருக்கிறது என்று கருத்து தெரிவித்து

அஞ்சலியின் 50 வது படத்தின் டைட்டில் இதுதான்: செம்ம ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

தமிழ் தெலுங்கு திரையுலகில் நடிகைகளில் ஒருவரான அஞ்சலியின் 50வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக்