'ஜிகிர்தண்டா 2' பார்த்து ரஜினிகாந்த் வாழ்த்து..! என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

  • IndiaGlitz, [Tuesday,November 14 2023]

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ஜிகர்தண்டா 2’ திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். இயக்குனர் ஷங்கர், இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்பட பலர் பாராட்டு தெரிவித்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். லாரன்ஸால் இப்படியும் நடிக்க முடியுமா என்ற பிரமிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்ஜே சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருக்கிறார்.

திருவோட கேமரா விளையாடி இருக்கிறது. கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டுக்குரியது. சுப்பராயன் சண்டை காட்சிகள் அபாரம். சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமான இசையமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரோடி தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார்.

இந்த படத்தை இவ்வளவு பிரமாண்டமாக எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு எனது தனி பாராட்டுக்கள். படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார்கள். நடிகர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு யானைகளும் நடித்திருக்கின்றன. செட்டானியாக நடித்திருக்கும் விது அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அற்புதம்.

இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார். பிரமிக்க இருக்கிறார். சிந்திக்க வைக்கிறார். அழவும் வைக்கிறார். கார்த்திக் சுப்புராஜை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். எனது அன்பான வாழ்த்துக்கள்’ என்று ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

'கிடா' படத்தின் காட்சியை ரத்து செய்துவிட்டார்கள்: இயக்குனரின் வேதனை பதிவு..

இயக்குனர் ரா வெங்கட் இயக்கத்தில் உருவான 'கிடா' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு போதுமான பார்வையாளர்கள் இல்லை என சென்னை திரையரங்கம் காட்சியை ரத்து

திருப்பூர் சுப்பிரமணியன் தியேட்டருக்கு நோட்டீஸ் அனுப்பிய கலெக்டர்.. என்ன காரணம்?

திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் அவர்களுக்கு சொந்தமான தியேட்டருக்கு  மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'கேப்டன் மில்லர்' படத்தின் சூப்பர் அப்டேட்டை கொடுத்த ஜிவி பிரகாஷ்.. தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப

1000 திரையரங்குகளில் மீண்டும் ரிலீசாகும் கமல்ஹாசன் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மீண்டும் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படம் '800': இலவசமாக ஓடிடியில்..!

பிரபல இலங்கை சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படம் '800' கடந்த அக்டோபர் 6ஆ, தேதி திரையரங்குகளில் வெளியானது.  மதுர் மிட்டல் என்பவர் முத்தையா முரளிதரன் கேரக்டரில்